உயர்நீதிமன்றம் சாதகமான தீர்மானத்தை வழங்கினால் எனது ஆட்சிக் காலம் முடியும் முன் மரண தண்டனையை நிறைவேற்றுவேன்.
மரண தண்டனையை நிறைவேற்ற உயர்நீதிமன்றம் சாதகமான தீர்மானத்தை வழங்கினால் எனது ஆட்சிக் காலம் முடியும் முன் மரண தண்டனையை நிறைவேற்றுவேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன தெரிவித்தார்
நேற்று ஹில்டன் ஹோட்டலில் இடம்பெற்ற தேசிய இளைஞர் நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.
நான் 4 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்ற கையொப்ப மிட்டேன்.
எனது அந்த கையொப்பத்தை அடுத்து பல வகையான அரசியல் எதிர்ப்புகள் ஆரம்பமானது.
ஒருசிலர் உச்சநீதிமன்றத்தையும் நாடினர்.
உச்சநீதிமன்றம் மரணதண்டனைக்கு சாதனமாக தீர்மானம் வழங்கினால் நான் நிச்சயம் நிறைவேற்றுவேன். என அவர் மேலும் தெரிவித்தார்.













